மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்காக இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாசகர்களும் குர் ஆன்,சுன்னாவை அடிப்படையாக வைத்து islamiyatheerppu@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்ப முடியும் என்பதை அன்பாய்த் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, May 20, 2011

இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமீர் (?) ஹஜ்ஜுல் அக்பரிடம் சில கேள்விகள்.

உஸ்தாத்(?) ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே !

கடந்த ஏப்ரல் மாத அல்ஹஸனாத்தில் தஃவாக் களம் பகுதியில் குர்ஆன்,ஸ{ன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தீர்கள், அந்தக் கட்டுரையில் குர்ஆன் சுன்னாவை மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.


மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசுவதென்றால் சிலைகள் கூடாது என்று சொல்லக் கூடாது அப்படித்தானே? ஏன் என்றால் சிலையை வணங்குபவனின் மனம் புன்பட்டுவிடும் பாவம்.

அதே போல் தர்காக்களை வணங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யக் கூடாது. (நீங்கள் தர்காக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனி விஷயம்) ஏன் என்றால் தரிக்கா வாதிகளின் மனதுகள் புன்படும் அப்படித்தானே?

விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்யப் கூடாது ஏன் என்றால் விபச்சாரம் செய்பவனின் மனது புன்பட்டுவிடும் அப்படித் தானே?

இப்படி அடுத்தவர்களின் மனது புன்பட்டுவிடாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டுக்குள் வந்தால் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் இலச்சனம் உங்களைப் போல் ஷீயா மதத் தலைவர்களுடன் தான் கைகோர்க்க வேண்டிவரும் (பெப்ரவரி மாத அழைப்பில் ஷீயா மதத் தலைவருடன் தாங்கள் நின்ற போட்டோ வெளியிடப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம்)

அத்தோடு இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மாண்புமிகு அறிஞர்களான மவ்லானா மவ்தூதி, யூசுப் அல் கர்ளாவி போன்றவர்களை சிலர் தூற்றுகிறார்கள் என்று கவலைப்பட்டுள்ளீர்கள். நபியவர்கள் மீது அவதூறு பரப்பி அபாண்டத்தை சுமத்தும் மவ்தூதியையும் மார்க்கத்திற்கு விரோதமான பல பத்வாக்களை சொல்லி மக்களை வழிகெடுத்துவரும் கர்ளாவி போன்றவர்களையும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டினால் உங்களுக்கு கொதிக்கிறது.

நபியவர்கள் மீது அவதூரும், அபாண்டமும் சொன்ன மவ்தூதி உங்கள் பார்வையில் மான்புமிகு அறிஞர் அப்படித்தானே?

நாம் உங்கள் மீதும் ஜமாத்தே இஸ்லாமி மீதும் எடுத்து வைக்கும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நீங்கள் வெளியிட்ட புத்தகங்களை ஆதாரம் காட்டித்தான் வெளியிடப்பட்டுள்ளது.

நபியவர்கள் மீது மவ்தூதி சொன்ன அவதூருகள் அனைத்தும் உங்கள் ஜமாத்தின் சமரசம் பத்திரிக்கையில்தான் வெளியிடப்பட்டுள்ளது.

அதனால் மீண்டும் மீண்டும் அவதூரு சொல்கிறார்கள், கட்டிங் பேஸ்ட் பண்ணுகிறார்கள், எடிடிங் செய்துவிட்டார்கள் என்று பழைய புராணம் பாடி திரும்பத் திரும்ப பொது மக்களை ஏமாற்றிப் பிழைக்க முடியும் என்று நினைக்காதீர்கள்
.